Sunday, May 15, 2005

உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்...


உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்...

கருவே!!!!
என் உறவில் விழைந்த உயிரே!
உலகே எனக்கு உறங்கியிருக்கையில்,
உதிரத்தில் உதித்து, உயிரினுள் உயிரானாய்,

நீ அரும்பிய நாள் முதலாய்,
அழுகின்றேன் ஆனந்தத்தில்,
அலைகின்றேன் ஆகாயத்தில்,

நீ மலரும் நாளுக்காய்,
மயங்கி தவிக்கின்றேன்,
மனம் ஏங்கி துடிக்கின்றேன்,

நீ கருவாய் உருவாகி,
கற்பனைக்கு உரமிட்டு,
கனவுகளை பயிரிட்டாய்,

கவலைகளை போக்க,
களிப்புடனே வந்து விடு,

மருட்டும் பார்வையுடன்,
மங்களமாய் வந்து விடு,

உனக்காக இங்கே.....
உயிரை தாங்கும் உயிர்.........