Sunday, May 15, 2005

குழந்தைகள்!!!


குழந்தைகள்!!!

கள்ளமில்லா உள்ளம்,
கவலையில்லா இதயம்,

மலரத்துடிக்கும் அரும்பு,
மழலை பேசும் குறும்பு,

வசந்தம் தரும் தென்றல்,
வண்ணங்கள் நிறைந்த வானவில்,

எல்லாம் கலந்த கலவையாய்,
எம் மனம் கவரும் இனிமையாய்,

வாழ்வின் உயிர்த்துடிப்பாய்,
வளரும் தேவதைகள்!!