Sunday, May 15, 2005

வாழ்வு ஒரு வானவில்!!!

வாழ்வு ஒரு வானவில்!!!

அழகான வண்ணங்கள் கண்டு
எண்ணங்கள் இனிக்கும்....
மனம் தயங்கி நின்றாலும்
மயங்கி நிற்கும் இதயம்....

கண் மூடி அனுபவிக்கும்
கலங்கி பரதவிக்கும்....
கண் விழித்து பார்க்கையில் தெரியும்
காண்பது வானவில் என்று

புரியும் அப்போது...
வானவில்லின் இயல்பு
வருவதும் மறைவதும் என்று

எது நிரந்தரம்....
அதை புரிந்து கொண்டால்...
வாழ்வு சுகம் தரும்......
வாழ்வு ஒரு வானவில்!!!