Thursday, October 27, 2005

ஊமை உள்ளம்!!


உதடுகள்தான் சொன்னது,
உன்னை மறந்து விட்டேனென்று...
உணர்வுகள் அதை மறுத்தும்,
உள்ளம் ஊமையானது....

கண்மூடி இருக்கையிலே,
கன்னத்தில் வழிந்தோடும்
கண்ணீரில்தான் புரிகிறது..
காதலின் தவிப்பும், இந்த
காயத்தின் வலியும்....