Friday, September 02, 2005

நிலாச்சோறு!!!

பால் நிலா.. அங்கே
பகிர்ந்துண்ட உணவு

அம்மாவின் கையால்
ஆசையாய் நிலாச்சோறு
அன்பினையும் பகிர்ந்து
ஆவலுடன் உண்டோம்....

அது மட்டுமா?

போர்க் காலச் சூழலிலும்... அதே
பால் நிலாத்தான்.. ஆனாலும்
பகிர்ந்துண்ட உணவு
பாரமாய் மனத்திரையில்...

மனைகளுக்கு
மின்சாரமில்லை
மண்ணெண்ணை விலையிலோ
மலை போன்ற உயர்வு
வீட்டிற்குள்
விளக்குமில்லை
வெளிச்சமுமில்லை

ஆதலால் நமக்கு
நிலாச்சோறு
கட்டாயமானது...