Sunday, May 15, 2005

வானவில்!!


வானவில்!!

வண்ணங்களை குழைத்து
அங்கே அழகாய்
வானத்தில் தெளித்தது யார்?

வெயிலும் மழையும்
காதலில் நெருங்கி வர....
ஒளிக்கதிர் எனும்
தளிர்க்கரம் நீட்டி.....
மழைத்துளியை
வெயில் இதமாய் தழுவிட.....
ஒளிச்சிதறல்கள் அங்கே...
வானில் தெறித்தது
வண்ண கோலமாய்......

நேரத்தின் அவசரத்தில்...
மழைதுளி - தன்
இனிய அனுபவத்தில்..
தன்னையே இழந்து செல்ல
கோலங்கள் கரைகிறது
துளிகளினூடே........