Sunday, May 15, 2005

ஏழ்மை!!


ஏழ்மை!!

குற்றுயிராய் இரை தேடும்,
குழந்தை உடலொன்று,
கூனல் நிமிர்த்தாமல் நகர்கிறது அங்கே.....

பிரியாமல் அவ்விடத்தில்,
பிணம் தின்னும் கழுகொன்று,
பீதியை ஏற்படுத்தி காத்திருக்கு இங்கே....

கலைந்த தலையும்,
கவலை தோய்ந்த கண்களுமாய்,
காய்ந்த வயிறுகளும் வீழ்கின்றன அங்கே....

பொன்னுக்கும் பொருளுக்கும்,
பொறாமையுடன் பதவிக்கும்
போட்டியிடும் கூட்டமொன்று வாழ்கிறது இங்கே....

நெஞ்சை உருக்குகின்ற
நிகழ்ச்சிதனை கண்டும்,
நெகிழாத மனம் கொண்டு,
நிற்பவரும் உண்டு....

உள்ளத்தால் உருகி நின்று,
உணர்வாலே நெருங்கி வந்து,
துயருறுவோர் நிலை கண்டு
துடிப்பவரும் உண்டு..