Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, August 18, 2005

முயற்சி செய்!!

ஒளி தெரியும் வானமது
தொலைவில்தான்
ஆனாலும் வானத்தை,
தொட்டு விட முயற்சி செய்...

எழில் மிகுந்த மலைமுகடும்
உயரத்தில்தான்
ஆனாலும் உச்சியை,
எட்டிவிட முயற்சி செய்...

Sunday, May 15, 2005

எது சமுதாயம்??

எது சமுதாயம்??

அவன்,
அவள்,
அவர்கள்....
அல்ல சமுதாயம்.....
நான், நீ, அவர்கள்...
எல்லாம் நிறைந்த,
நாமே சமுதாயம்

நிழலாகும் நிஜம்......

நிழலாகும் நிஜம்......

நிஜங்கள்
நிழல்களாகையில்...
கையில்...
நினைவுச் சின்னங்கள் எதற்கு....
அதுதான்..
நெஞ்சு நிறைய..
நினைவுகள் உண்டே....

தூரப்பயணம் செய்!

தூரப்பயணம் செய்!

குறுகிய வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறோம்.....
சுற்றமும், உறவுகளும்-
அதுவே நம், உலகமாய் எண்ணி,

உலகம்.... பரந்தது, விரிந்தது....
வான வீதியில்,
சிறகு விரித்துப் பறக்கலாம்....
உனக்கென மட்டும் எண்ணாமல்,
உலகுக்குமாய் சேர்த்து.......

திறமைகள் உண்டெனில்,
மடமைகள் போக்கி,
துயரங்கள் நீக்கி,
தூரப்பயணம் செய்யலாம்,

மீண்டும் மீண்டும் -
இந்த சிறிய வட்டத்தினுள் -
ஏன் குறுகிய பயணம்?