Friday, August 05, 2005

தடையங்கள்!!!


கடலோர
புதை மணலில்
அதோ
சிலகால் சுவடுகள்,

பெண் அவள் மனதில்
அவன் விட்டுப் போன
பாரமான
தடையங்கள்
அழியாமல்,

ஆரவாரமாய்
எழப்போகும்
கடல் நீர்
அழித்துவிடும்
கால் சுவடுகளை,

ஆனால்
அவள் நெஞ்சின்
தடையங்கள்
அழியுமா
இவ்வாழ்வில்???