கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
பிஞ்சு மலர்கள்
கொஞ்சும் மொழியில்.....
பாடம் கற்றுத்தந்த
பாடலை
பாங்காய் பாடினர்......
வண்ணங்களை
வார்த்தையில் குழைத்து
வசந்தமாய் வீசினர்.........
"காலைத் தூக்கி
கண்ணில் ஒற்றி
கட்டிக் கொஞ்சும் அம்மா"......
தேனைத் தீயில்
தெளித்ததுபோல்....
மனம் கனத்தது
மெளனமாய் அழுதது....
கண்களில் கண்ணீர்.....
காரணம்.........
பாடிய பாலகர்கள்.....
அம்மாவின்
அரவணைப்பை,
அர்த்தத்தை,
அன்பை,
அறிந்திராத
அநாதை குழந்தைகள்!
Wednesday, May 18, 2005
கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
Posted by
கலை
at
5/18/2005 07:26:00 AM
5
comments
Labels: சோகம்
Subscribe to:
Posts (Atom)